சிறுமிகளை சீரழித்த கொடூர கும்பல்.. காவல் ஆணையர் போட்ட உத்தரவு

x

சிறுமிகளை சீரழித்த கொடூர கும்பல்.. காவல் ஆணையர் போட்ட உத்தரவு

பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் கைதான முக்கிய நபர்கள் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், நதியா உள்ளிட்ட 8 பேரை மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த நதியாவை தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரித்தபோது, பாலியல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், வழக்கில் முக்கிய நபர்களான நதியா, ராமச்சந்திரன், தண்டபாணி, மாய ஒலி ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்