ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் ஸ்தம்பிக்கும் சென்னை ECR சாலை

x

சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி காரணமாக, கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உத்தண்டியில் உள்ள தனியார் மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி, ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில், மழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், இன்று மீண்டும் அந்த மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருகை தந்ததால், கிழக்கு கடற்கரை சாலை, பனையூர், ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்