அபாய சிக்னல் கொடுத்த வானிலை.. முக்கிய இடங்களில் காத்திருக்கும் எமன்கள்..

x

வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 15-ஆம் தேதிக்குப் பின் தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பனும், சென்னையில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் இன்னும் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சூளை ராஜா முத்தையா சாலை, பேசின்பிரிட்ஜ் சாலை, பிராட்வே பிரகாசம் சாலை, சிந்தாதரிப்பேட்டை அருணாச்சலம் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, கே.கே. நகர் ஆகிய இடங்களில் இன்னும் பணிகள் முடிக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு, சாலைகள் மீண்டும் போடப்படவில்லை. இதனால், மழைக் காலத்தில் சாலையில் எங்கு பள்ளம் இருக்கிறது என தெரியாமல், விபத்துகள் நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்