மழையால் மாறிய வாழ்க்கை.. "பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் போச்சி.." புலம்பும் சென்னை மக்கள்

x

சென்னை கொரட்டூரில் பல தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பிரதான சாலைகளில் வெள்ளம் வடிந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளுக்குள் நுழைவதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மின் கம்பிகளை நடைபாதையில் திறந்தவெளியில் வைத்திருப்பதால் நடைபாதையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாகவும் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்