சென்னை புழலுக்கு காலையிலேயே வந்த பொக்லைனை கண்டு நடுங்கிப்போன மக்கள்

x

சென்னை புழல் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்றது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 70க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்து அப்புறப்படுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த‌து. ஏற்கனவே எம்ஜிஆர் நகர் பகுதியில் வீடுகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், காஞ்சி நகர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் 6 மீன் பண்ணைகள் அகற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்