அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் திடீர் ரெய்டு.. அடுத்தடுத்து 5 இடங்களில்... சென்னையில் பரபரப்பு

x

சென்னை வேளச்சேரி ஆண்டாள் நகர் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர், அதிமுகவில் பகுதி செயலாளராக உள்ளார். இவர், கடந்த 2021ம் ஆண்டு வேளச்சேரியில் விதிகளை மீறி, 1200 சதுர அடி நிலத்தை தனது பெயரில் 600 சதுர அடியும், தனது மனைவி பெயரில் 600 சதுர அடியும் பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதனைக் கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக அப்போதைய வேளச்சேரி வட்டாட்சியர் மணிசேகர், அ.தி.மு.க. நிர்வாகி மூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்