சென்னையை அதிரவைத்த காக்காத்தோப்பு பாலாஜி என்கவுண்டர்.. தமிழக போலீசுக்கு கேரளாவில் அடித்த சல்யூட்

x

காக்காத்தோப்பு பாலாஜியை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற காவல்துறையினருக்கு, வாழ்த்து தெரிவித்து கோழிக்கோட்டில் இளைஞர்கள் விளம்பர பலகை வைத்துள்ளனர்

சென்னையை சேர்ந்த காக்காத் தோப்பு பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி, கடந்த ஜூலை 1 -ம் தேதி முதல் 27 - ம் தேதி வரை கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பேராம்பிரா அருகே வலியப்பரம்பு எனும் கிராமத்தில் தலைமறைவாக தங்கி இருந்துள்ளார். அப்போது தமிழக போலீசார் பாலாஜியை தேடி அங்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பாலாஜி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இந்த நிலையில், காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட செய்தி அறிந்த அந்த கிராமத்து இளைஞர்கள் தமிழக காவல்துறையினரை வாழ்த்தி விளம்பர பலகை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்