மகனின் செயல்பாட்டில் மாற்றம் - நோட்டம் பிடித்த தாய் செய்த செயல்...

x

வீட்டில் கஞ்சா ஆயில் வைத்திருந்த மகனை, தாய் போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் சென்னை வியாசர்பாடியில் அரங்கேறி இருக்கிறது.

வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீராம். 21 வயதான இவர், ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீராமின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தாய் பாக்கியலட்சுமி, மகனின் செயல்பாடுகள் சரியில்லாதை அறிந்து அவரை நோட்டம் பிடித்திருக்கிறார். முடிவில் போதைப்பொருள் ஒன்றை மகன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்த அவர், அடுத்த கணமே போலீசில் புகாரும் அளித்திருக்கிறார். இதனடிப்படையில், பாக்கியலட்சுமியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், வீட்டிற்குள் ஸ்ரீராம் கஞ்சா ஆயில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆக்டிங் டிரைவாக பணியாற்றி வந்த ஸ்ரீராம், கடந்த 25 ஆம் தேதி ஒடிசா சென்று திரும்பிய நிலையில், வரும் வழியில் கேரளாவை சேர்ந்த அருண் என்பவருக்காக ஆந்திராவில் இருந்து கஞ்சா ஆயில் வாங்கி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து 600 கிராம் அளவிலான கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீராமை கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பர்வேஷ் என்பவரையும் கைது செய்திருக்கும் போலீசார், கஞ்சா ஆயிலை வாங்கி வரச் சொன்ன கேரளாவை சேர்ந்த அருண் என்பவரை தேடி வருகின்றனர்.

-


Next Story

மேலும் செய்திகள்