உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் சென்னை நீதிபதி சொன்ன நெகிழ்ச்சி கருத்து

x

உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் சென்னை நீதிபதி சொன்ன நெகிழ்ச்சி கருத்து

நீதிபதி பதவியை, பதவியாக நினைக்காமல், எனக்கிடப்பட்ட பணியாகக் கருதி தொடர்ந்திருக்கிறேன் என, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்.

பதவி உயர்வு பெற்ற நீதிபதி மகாதேவனுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய மகாதேவன், ஒரு நீதிபதியாக 10 ஆண்டுகள் கடந்து பணியாற்றிய நிலையில் மனதளவில் எவரையும் புண்படுத்தியதாக நினைவில்லை எனக் குறிப்பிட்டார். இளைய வழக்கறிஞர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் ஒன்றாகவே பார்த்ததாகவும் குறிப்பிட்டார். நீதிபதி பதவியை, பதவி என நினைக்காமல் இடப்பட்ட பணியாக கருதி தொடர்ந்திருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்