"கடந்த 10 ஆண்டுகளில்.." - ஆளுநர் R.N. ரவி சொன்ன தகவல்

x

கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் வருமான வரி தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 200 சதவீதம் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 300 சதவீதம் பெறப்பட்ட வருமான வரித்தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வருமான வரி நாட்டிற்கு மிக தேவையானது எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்