நேற்று சென்னைக்கு அதானி திடீரென வந்தது ஏன்? - பரபரப்பு தகவல்

x

சென்னை வந்திருந்த தொழிலதிபர் கவுதம் அதானி, மீண்டும் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். மும்பையில் இருந்து தனி விமானம் மூலம், தொழிலதிபர் கவுதம் அதானி நேற்று மாலை 5.40 மணிக்கு சென்னை வந்திருந்தார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது தொடர்பாக, அதானி சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஐந்து மணிநேரம் சென்னையில் இருந்த கவுதம் அதானி, இரவு 10.40 மணிக்கு அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் சார்பில், நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், கவுதம் அதானியின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்