சென்னையில் வட்டி கொடுக்காமல் ஏமாற்றிய பிரபல பைனான்ஸ் கம்பேனி - ஆவேசத்துடன் குமுறும் மக்கள்

x

சென்னையில் முதலீடு செய்த பணத்திற்கு முறையாக வட்டி தராததால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள பழமையான தி மயிலாப்பூர்

இந்து சாசுவத நிதி லிட் என்ற நிதி நிறுவனத்தில்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல லட்சம் ரூபாயை

நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்துள்ளனர்.

அதற்கு10 முதல் 11 சதவீதம் வரை வட்டி

அளிப்பதாக கூறிய நிதி நிறுவனம் கடந்த

சில மாதங்களாக வட்டி வழங்கவில்லை என்றும்,

முதிர்ச்சி அடைந்த வைப்பு நிதியை திருப்பி

தர மறுப்பதாகவும் முதலீட்டாளர்கள்

புகார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி

காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகாரை

பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்