#BREAKING || "அண்ணன் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை காவு கொடுத்தோம்".. சென்னையை நடுங்கவிட்ட வாக்குமூலம்

x

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு. ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் எனக்கு மிரட்டல் விடுத்ததால் எனது மனைவி பிரிந்து சென்று விட்டார் - ஆற்காடு பாலு. அண்ணனும் இல்லை, மனைவியும் இல்லை என்பதால் தன்னை கொல்வதற்கு முன்பே ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டம் தீட்டிய ஆற்காடு பாலு. தென்னரசு கொலை வழக்கில் தன்னோடு சிறையில் இருந்தவர்கள், சுரேஷின் கிளப் ஊழியர்கள், ஆதரவாளர்கள் உடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம். ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல். உளவுத்துறையின் எச்சரிக்கையை செம்பியம் போலீசார் கண்டு கொள்ளவில்லை என தகவல். எப்போதும் ஆதரவாளர்கள் உடன் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் தனியாக இருக்கும் நேரத்தை கண்காணித்து வந்த கொலை கும்பல். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விசாரித்து வரும் காவல்துறை உயர் அதிகாரிகள்.


Next Story

மேலும் செய்திகள்