ரூ.35 கோடி.. கண்டெய்னர் மாயம்.. பிரபல தனியார் நிறுவனத்துக்கு ஷாக்

x

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் துறைமுகத்துக்கு வரும் சரக்குகளைச் சம்மந்தப்பட்ட கம்பெனிகளுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பதுதான் இதன் முக்கிய வேலை. இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த கம்பெனிக்கு சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட ரூ 35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய கன்டெய்னர் காணவில்லை எனப் புகார் அளித்ததால் சரக்குகளைக் கையாளும் நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சரக்குகளைக் கையாளும் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் இளவரசன் திருட்டு கும்பலுடன் சேர்ந்து கன்டெய்னரை டிரைலர் லாரியில் கடத்தி சென்று திருவள்ளூரில் பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.இதனைத் தொடர்ந்து டிரைலர் லாரி ஒட்டுநர் மணிகண்டன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இளவரசன் உட்பட தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்