கடலை பார்த்ததும் துள்ளி விளையாடிய சென்னை ஐடி ஊழியர்கள் - அப்படியே விழுங்கிய ராட்சத அலை...

x

கடலை பார்த்ததும் துள்ளி விளையாடிய சென்னை ஐடி ஊழியர்கள் - அப்படியே விழுங்கிய ராட்சத அலை... சில நொடிகளில் முடிந்த வாழ்வு

சிதம்பரம் அருகே கடலில் குளித்த இரண்டு ஐடி ஊழியர்கள், ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கூடுவாஞ்சேரியில் செயல்பட்டு வரும் ஒரு ஐடி நிறுவனத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து பிச்சாவரம் சென்ற அவர்கள், பின்னர் சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி ஷாம்சுந்தர், கோகுல் பிரசாத் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்