சென்னையின் பிரபல ஹோட்டலில் மட்டன் எலும்பில் நெளிந்த உருவம்... பரபரப்பு காட்சிகள்

x

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த குணா என்பவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பரிமாறப்பட்ட பிரியாணியின் மட்டன் எலும்பில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் குறித்து உணவக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். மேலும், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தனது குடும்பத்தினரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்