சென்னையில் பாதுகாப்பு பணியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

x

சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த காவல் ஆய்வாளர் முத்துகுமாரின் உடல் சொந்த ஊரான நெல்லையில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு வரப்பட்டதும், உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சேரன்மாதேவி சப் கலெக்டர் அர்பித் ஜெயின், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்பு அவரது உடல் அரசு மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு ஊருக்கு அருகே உள்ள இடுகாட்டில் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்