விமானத்தில் வந்த எலக்ட்ரிக் எமன்.. - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

x

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கிராம் தங்கச் செயின்கள், ஐபோன்கள், இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், 4 பேரை கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு திரும்பிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். உடமைகளை சோதனை செய்தனர். 700 கிராம் எடை கொண்ட தங்க செயின்கள், 3 ஆயிரத்து 220 இ- சிக்ரெட்டுகள், 4 ஐபோன்-16 இருந்தன. அவற்றின் மதிப்பு ஒரு கோடியே 2 லட்சம் என்பது தெரியவந்தது. இதுதாடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்