நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதி.. எழுந்திருப்பதற்குள் ஏறி இறங்கிய லாரி - மதுரவாயல் பைபாஸில் பயங்கரம்

x

சென்னை மதுரவாயலில் கனரக லாரி ஏறி, இருசக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், தனது மனைவி லட்சுமியுடன் மதுரவாயலில் இருந்து திருவேற்காட்டிருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வானகரம் சாலையில், நிலைதடுமாறி கீழே விழுந்தபோது அவர்கள் மீது கனரக வாகனம் ஏறி, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கனரக வாகன ஓட்டுனர் ராகுல் என்பவரை கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்