சென்னையில் மசூதி தடுப்புச்சுவர் இடிப்பு... கொந்தளித்த இஸ்லாமியர்கள்... உடனே விரைந்த போலீஸ்

x

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான மசூதி தடுப்பு சுவரை, தனியார் கல்லூரி நிர்வாகம் இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய அமைப்பினர், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த போலீசார், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதியவில்லை என்றால், ஆற்காடு சாலையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்