சென்னை தனியார் ஹாஸ்பிடலில் வைகோ - இன்று மாலை அறுவை சிகிச்சை

x

தோள்பட்டை காயம் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று மாலை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.நெல்லையில் தனது சகோதரர் இல்லத்தில் தங்கி இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய வைகோ, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு இன்று மாலை லேசான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 3 நாட்கள் வரை வைகோ மருத்துவமனையில் தங்கி இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வைகோவை பார்பதற்காக கட்சி நிர்வாகிகள் யாரும் நேரில் வர வேண்டாம் என மதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்