சிறுவர்களை குறிவைத்த திருநங்கை.. ஆசை வார்த்தை கூறி பாலின மாற்று ஆபரேஷன்

x

4 சிறார்களை திருநங்கையாக மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்ததாக திருநங்கை அலினா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்ற மூதாட்டி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். தன்னுடைய 17 வயது பேரனுடன் சமூக வலைதளம் மூலமாக திருநங்கை அலினா என்பவர் பழகி வந்த‌தாக கூறினார். சிறுவன் படிக்கும் பள்ளிக்கு சென்று அடிக்கடி பேசியதாகவும், படிக்காமல் வேலைக்கு போகாமல், ஆசைப்பட்டது போன்று வாழ‌லாம் என ஆசைவார்த்தை கூறி சிறுவனை அழைத்துச் சென்று, மதுரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பெண்ணாக மாறுவதற்காக பாலின அறுவை சிகிச்சை செய்த‌தாகவும் மூதாட்டி குற்றம் சாட்டினார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கேட்டபோது, திருநங்கை அலினா கொலை மிரட்டல் விடுத்த‌தாகவும், சிறுவனை பிச்சை எடுக்கவும், பிக்பாக்கெட் அடிக்கவும் கற்றுக் கொடுத்த‌தாகவும் புகார் தெரிவித்தார். அவரிடம் இருந்து தப்பித்து வந்த சிறுவன், தன்னைப்போல 4 பேரை திருநங்கையாக மாற்றி பிச்சை எடுக்க வைத்துள்ளதாக கூறியதாகவும், திருநங்கை அலினா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்