வாகனம் ஓட்டத் தெரியாது என்ற பெண்ணுக்கு பதிலடி - போலீசார் `Rocked' பொதுமக்கள் `Shocked'

x

சென்னை பூந்தமல்லியில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஹெல்மெட் அணியாமல் வந்த ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் அபராதம் விதித்தனர். குமணன்சாவடி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், குழந்தையுடன் ஹெல்மெட் அணியாமல் வந்த நபரை தடுத்து நிறுத்தினர். ஆங்கிலத்தில் பேசிய அவரிடம், போக்குவரத்து போலீசாரும் சளைக்காமல் ஆங்கிலத்தில் பேசி அபராதம் வசூலித்தனர். இதேபோன்று, ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பெண் ஒருவர், தமக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாது என கூற, அப்படியானால், ஆட்டோவிலோ, வாடகைக் காரிலோ செல்ல வேண்டியது தானே என பதிலடி கொடுத்து, அபராதம் வசூலித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்