சென்னையில் சிக்கிய சிறுவர்கள்... அரங்கேற்றிய வில்லங்கம்... பின்னணியில் இறங்கிய ஒடிசா கேங்

x

தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து, 3 இளைஞர்களின் செல்போன்கள், சரியாக பேருந்தில் ஏறும்போது திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து 3 பேரும் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த ஐவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த ஐவரும், சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, இதுபோன்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மூவரிடமிருந்து 17 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், இருவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐவரும் திருடிய செல்போன்களை ஒடிசாவில் விற்று வந்தது தெரியவர, ஐவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்