``ஒரு செல்போனுக்காக..'' சென்னையை அதிர வைத்த டீ மாஸ்டர்... விசாரணையில் கொதித்த போலீசார்

x

மனைவிக்கு செல்போன் வாங்கி தருவதற்காகக் கடத்தல் நாடகம் ஆடிய வட மாநிலத்தைச் சேர்ந்த டீ மாஸ்டரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் டீ மாஸ்டராக பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதிகாலை சுனில் குமார் திடீரென காணாமல் போனதால் சக ஊழியர்கள் தேடியுள்ளனர்.அப்போது சக ஊழியர்களுக்குப் போன செய்த சுனில் குமார் தன்னை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடத்தி விட்டதாகவும், ரூ 30 ஆயிரம் கொடுத்தால் தான் தன்னை விடுவிப்பதாகக் கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்ணை வைத்து சென்ட்ரலில் இருந்த சுனில்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது தனது மனைவி புதிய செல்போன் கேட்டதாகவும் அதற்கு ரூ 30 ஆயிரம் தேவைப்பட்டு இருக்கிறது. தனது சம்பளம் குறைவாக இருப்பதால் கடத்தல் நாடகம் ஆடினால் ஹோட்டல் நிர்வாகத்தினர் தன்னை ரூ 30 ஆயிரம் கொடுத்து மீட்பார்கள் என நினைத்து நாடகம் ஆடியதாக போலீசாரிடம் கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் சுனில்குமாரை எச்சரித்து அனுப்பினர்


Next Story

மேலும் செய்திகள்