கணவனுடன் சிக்கிய பெண் போலீஸ்... - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court | TNPolice

x

போலி ஆவணம் மூலம் நிலம் வாங்கி மோசடி செய்த வழக்கில், பெண் காவலர் மற்றும் அவரது கணவரை நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவொற்றியூர் காவல்நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்த தேவியும், அவரது கணவர் ரகுவும் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தம்பதியை கைது செய்து நொளம்பூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்