15 பேருக்கு அல்வா..கையும் களவுமாய் சிக்கிய நபர் - விசாரணையில் அதிர்ந்துபோன போலீஸ்

x

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் அருண் சந்திரா. 37 வயதான இவர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சீட் பெற்றுத் தருவதாகவும், ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். தொடர்ந்து, இரு வருடங்களுக்கு முன் சுமார் 15க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 45 லட்ச ரூபாய் பணம் பெற்று தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் கொடுத்து ஏமாந்த மக்கள் அருண் சந்திராவை தேடி வந்த சூழலில், குன்றத்து அருகே வந்து கொண்டிருந்த அவரை பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மோசடி பணத்துடன் அருண் சந்திரா மும்பையில் தலைமறைவாகி இருந்ததாக தெரிவித்திருக்கும் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்