ஆஃபரில் கஞ்சா விற்பனை..! நண்பர்களை அலேக்காக தூக்கிய போலீஸ்! சென்னையில் பரபரப்பு | Chennai

x

பல்லாவரத்தை அடுத்த பம்மல் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து, ரகசியமாக கண்காணித்து வந்தபோது, பம்மல் நாகல்கேணி பகுதியில் 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கிண்டியை சேர்ந்த நிசார் என்பதும், செஞ்சியை சேர்ந்த ராஜாமணி என்பது தெரிய வந்த‌து. இவர்கள் ரயிலில் ஒடிசா சென்று, கஞ்சாவை மொத்தமாக வாங்கி, பேருந்து மூலம் சென்னை கடத்தி வந்து, சலுகை முறையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்