திடீரென ஏற்பட்ட வாயு கசிவு.. மாணவிகள் மூச்சுத்திணறல், மயக்கம்..! அலட்சியமாக பேசிய டீச்சர்கள்.. சென்னையில் அடுத்தடுத்த பரபரப்பு

x

சென்னையில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால், மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னளனர்.

திருவொற்றியூர் கிராமதெரு பகுதியில் உள்ள விக்டோரியா என்ற தனியார் பள்ளியில்,

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மதியம்

திடீரென கெமிக்கல் வாசம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை அவசர அவசரமாக வெளியேற்றியது. குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளியின் முன்பு பெற்றோர்கள் குவிந்தனர். இதில், வாயுவினால் பாதிக்கப்பட்ட

சுமார் 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகாமையில் இருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து ஏதேனும் வாயு வெளியேறியதா? அல்லது பள்ளியின் உள்ளேயே இருக்கும் லேப் இல் இருந்து வெளியேறியதா? என தெரியாத நிலையில் குழப்பம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்