`சுகத்திற்காக ஊசி' - இளைஞர் செய்த பகீர்.. நிர்கதியாக மனைவி

x

`சுகத்திற்காக ஊசி' - இளைஞர் செய்த பகீர்.. நிர்கதியாக மனைவி

போதை ஊசி செலுத்திக் கொண்ட ஏசி மெக்கானிக் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது சபி. ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முகம்மது சபி கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையான முகம்மது சபி ஊசி மூலம் போதை மருந்துகளை உடலில் ஏற்றி இருக்கிறார். இந்த நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்த முகம்மது சபியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்