சென்னையில் இளைஞர் மரணம்.. "நிறைய பேர் விழுறாங்க".. குமுறும் மக்கள்

x

சென்னை, அசோக் பில்லர் பகுதியில், மழை நீர் வடிகால் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கும் நிலையில், உதயம் திரையரங்கம் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞர், வீட்டருகே தன் செல்லப்பிராணியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபரீதம் அரங்கேறியதாக கூறபப்டுகிறது. பள்ளம் முழுவதும் கழிவு நீர் தேங்கியிருந்த சூழலில், இளைஞர் மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்