கைதிகளை நிர்வாணமாக்கி தனிமை சிறையில் அடைப்பு! துப்பு கொடுத்த கடிதம்.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை கைதிகளை அடித்து துன்புறுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரளாவை சேர்ந்த அஷ்வின்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், வேலூர் மத்திய சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்த போது, விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி, தனிமை சிறையில் அதிகாரிகள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், கேள்வி கேட்டால் இருட்டு அறையில் அடைத்து துன்புறுத்துவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் சிறை கைதிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதிகாரிகள் இதனை மறைத்து விடுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். எனவே, சிறை கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்க கோரியிருந்தார். வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்