இறந்து கிடந்த முதியவர்..! உண்மையை காட்டிய சிசிடிவி.. சிக்கிய மாணவன் சொன்ன பேரதிர்ச்சி

x

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் அருகே உள்ள பிரபல ஹோட்டல் பார்க்கிங் பகுதியில் கடந்த 13ம் தேதி உயிரிழந்து கிடந்தார். உறவினர்கள் அவருக்கு இறுதிச் சடங்கு நடத்தும் நேரத்தில் உடம்பில் காயங்கள் இருந்ததைக் கவனித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து உறவினர்களே அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பன்னீர் செல்வத்தின் மீது கார் ஒன்று ஏறி இறங்கியதால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து போலீசார் ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த சென்னையில் படித்து வரும் கல்லூரி மாணவரான ஆதித்திய ராஜ் என்பவரை கைது செய்தனர். ஹோட்டல் பார்க்கிங் பகுதியில் உள்ள கட்டைகள் மீது ஏற்றி இறக்கியதாகவும் , கீழே யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்து இயக்கியதாகவும் ஆதித்திய ராஜ் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர் ஆதித்திய ராஜ் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்