"இன்று இரவு எப்படி தூங்குகிறீர்கள்?".. சொன்னதும் பற்றி எரிந்த குடிசைகள் - அலறி அடித்து ஓடிய மக்கள்

x

சென்னை அயனாவரம், புதிய ஆவடி சாலை 3வது தெருவில் சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன...

இப்பகுதியைச் சேர்ந்த சச்சின் என்பவருக்கும் சோலை நிவாஸ் என்பவருக்கும் கஞ்சா போதையில் சண்டை எழுந்துள்ளது.

கஞ்சா போதையில் இருந்த நண்பர் அப்பு பிரசாத் இருவரையும் விலக்கியுள்ளார்...

இதனால், சோலை நிவாஸுக்கும் அப்பு பிரசாத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சோலை நிவாஸ், "இன்று இரவு எப்படி அனைவரும் தூங்குகிறீர்கள்? என பார்த்து விடுகிறேன்." என கூறிவிட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதிகாலை 3 மணி அளவில் சோலை நிவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிலம்பரசன் உள்ளிட்ட சிலர் அப்பு பிரசாத் வீட்டிற்கு தீ வைப்பதற்கு பதிலாக அருகாமையில் இருந்த குடிசை வீடுகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

குடியிருப்பு வாசிகள் அலறி அடித்து வெளியேறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்