15வது மாடி;பலியான போலீஸ்-அதிர செய்த சம்பவம் 30 குண்டுகள் முழங்க வீர மரியாதையுடன் நல்லடக்கம்

x

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பின் 15வது மாடியில், பராமரிப்பு பணியில் ஈடுபட்ட காவலர் செல்வமுருகன் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான சுப்புலாபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுப்புலாபுரம் இடுகாட்டில் காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வீர மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்