ஷவர்மா,மீன் குழம்பு சாப்பிடுபவர்களை கதிகலங்க வைக்கும் செய்தி? - கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்த உயிர்

x

சென்னை மதுரவாயலை அடுத்த நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா, தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஷவர்மா பிரியையான சுவேதா போரூர் பகுதியில் உள்ள கடையில் கடந்த வாரம் ஷவர்மா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த சுவேதா மீன் குழம்பு சாப்பிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். பின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஷவர்மா சாப்பிட்டதினால் சுவேதா உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்