சென்னை மக்களை திக்குமுக்காட வைத்த பிராண்டட் ஷூ வியாபாரம்.. விழி பிதுங்கி நின்ற வாகன ஓட்டிகள்

x

குறைந்த விலைக்கு branded shoes கிடைக்கும் என்ற இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி, ஆயிரக்கணக்கானோர், சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாஸ் டீல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஷூக்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆஃபரில் விற்பனை நடைபெறும் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்ட யூடிப்பர்கள் இன்புளூயன்ஸர்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷுக்கள் 1 வாங்கினால், ஒன்று இலவசம், 2 வாங்கினால் மூன்று இலவசம் என 70% ஆஃபர்களை அறிவித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோார் குவிந்ததால், வடபழனி முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்