திடீரென ஏற்பட்ட வாயு கசிவு.. மாணவிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

திடீரென ஏற்பட்ட வாயு கசிவு.. மாணவிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி விசாரணை மேற்கொண்டார். இதே போன்று, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆய்வாளர் அருண்குமார் சவுகான் தலைமையில் 31 பேர் ஆய்வு செய்தனர். பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்ற என்.டி.ஆர்.எஃப். அதிகாரிகள், ஆய்வகம் கழிவறை குளிர்சாதன பெட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆலைகள் போன்றவற்றை தீவிரமாக ஆய்வு செய்திருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே, மாணவிகள் மயங்கி விழுந்ததற்கான முழுமையான காரணம் தெரிய வேண்டும் என பள்ளியின் வாசலை முற்றுகையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்