அடுத்து அலறிய தென் சென்னையின் பிரபல ரவுடி - தலைநகரில் மரண பீதியில் தாதாக்கள்

x

தவறி விழுந்ததால் வலது கால் முறிந்ததை தொடர்ந்து

பிரபல ரவுடி சிடி மணி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வந்த தென் சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி சேலத்தில் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது தப்பி ஓடிய சி.டி.மணி தவறி விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.டி.மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்