48,510 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் - ஒரேமேடையில் ஆளுநர் ரவி, புதிய அமைச்சர் கோவி. செழியன்

x

சென்னை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், விழாவிற்கு உயர் கல்வித்துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கோவி. செழியன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் நேரடி மற்றும் நேரடி அல்லாத முறையில் 48 ஆயிரத்து 510 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்