எதிர்பாராத நேரத்தில் சம்பவம் செய்த மழை.. ஒரே இரவில் சேஞ்சான சென்னை

x

மத்திய வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் பல்வேறு பகுதிகளும் மழை பெய்தது. குறிப்பாக அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளிளும் அண்ணாசாலை, கீழ்பாக்கம், எழும்பூர், ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மேலும் புறநகர் பகுதிகளான போரூர், மதுரவாயல், செங்குன்றம், திருவொற்றியூர் போன்ற பகுதிகளிலும் இந்த மழையானது பெய்தது.

இரவு நேரத்தில் பெய்த இந்த மழையால், சென்னை மாநகரம் முழுக்க குளிர்ச்சியான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்