அடுத்த நொடியில் மரணம்... அப்பாவியாக சிரித்து விளையாடிய பாட்டி, பேத்தி - சென்னை போரூரில் பெரும் சோகம்

x

அடுத்த நொடியில் ஒளிந்திருந்த மரணம்... அப்பாவியாக சிரித்து விளையாடிய பாட்டி, பேத்தி - சென்னை போரூரில் பெரும் சோகம்

சென்னை போரூர் அருகே, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதியதில் பாட்டியும், பேத்தியும் உயிரிழந்தனர்.

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த வெண்ணிலா என்பவர் தனது மகள்கள் மற்றும் பேத்தியுடன் தாம்பரத்தில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், போரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது ஆட்டோ வேகமாக மோதியது. இதில், ஆட்டோவின் முன்பக்கம் நொறுங்கியதில், வெண்ணிலா, அவருடைய மகள்கள், பேத்தி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வெண்ணிலாவும், அவருடைய பேத்தியும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மகள்களும், ஆட்டோ ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்