அண்ணனுக்கு வந்த சந்தேகம்... சுடுகாட்டில் தோண்டி எடுக்கப்பட்ட தம்பி உடல் - சென்னையில் ஷாக்

x

சென்னை, போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் ராம்ராஜ். 36 வயதான இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில், கடந்த 19 ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டிற்குள் உயிரிழந்து கிடந்துள்ளார். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அடக்கம் செய்திருக்கின்றனர். இந்நிலையில், தன் தம்பியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ராம்ராஜின் சகோதரர் ராஜூவ் போலீசில் புகாரளித்திருக்கிறார். இதனடிப்படையில், மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் மதனந்தபுர சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ராம்ராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கேயே மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்ட நிலையில், முடிவுகளுக்கு பின்னரே வழக்கின் உண்மை தன்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்