சென்னையில் கோயில் வாசலிலேயே அர்ச்சகருக்கு அரங்கேறிய சம்பவம் - பரபரப்பை கிளப்பும் வீடியோ

x

சென்னை புழல் அருகே கோயில் அர்ச்சகர், காலணியால் தாக்கப்பட்ட சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. லட்சுமிபுரத்தை சேர்ந்த 75 வயதாகும் குணசேகரன், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள கிருஷ்ணர் கோவிலில் அர்ச்சகராக இருந்து வருகிறார். கோபால் என்பவர் அக்கோவில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கோபால் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி, குணசேகரனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்