`இனி யாரும் தப்பிக்க முடியாது' சூரிய ஒளியில் இயங்கும் கேமரா பேரிகார்டு - அதிரடி காட்டும் சென்னை போலீஸ்

x

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் சூரிய ஒளியில் செயல்படும் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 5 கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன. முக்கிய சாலை சந்திப்புகளில் இவை வைக்கப்பட உள்ளன. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பைக் ரேஸ், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்களை ஸ்கேன் செய்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இது அனுப்பும். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில், இது அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்