சென்னை போலீஸின் மாஸ் ஸ்கெட்ச் - நேரில் கண்டதும் வெலவெலத்துப் போன கிரிமினல்

x

சென்னை போலீஸின் மாஸ் ஸ்கெட்ச் - நேரில் கண்டதும் வெலவெலத்துப் போன கிரிமினல்

சென்னையில் போதைப்பொருள் விற்பனை கும்பலை மடக்கி பிடித்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரும்பாக்கம் பகுதியில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக தீபக் - டாலி மேத்தா தம்பதி, மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த அபித் கிளாப்டனின் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த நபர் போதைப்பொருளை வாங்கி டீலர்களுக்கு விற்பது தெரியவந்தது. இதனையடுத்து, கைதான நபர் மூலம் வாடிக்கையாளர் போன்று பேசி போலீசார் ஒரு கிலோ மெத்தப்பெட்டமைன் கேட்டுள்ளனர். இதனை நம்பி ஆந்திராவில் இருந்து விஸ்வநாதன் என்பவர் போதைப் பொருளுடன் வந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றுள்ளார். எனினும் போலீசார் விடாமல் அவரை துரத்தி பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்