ஆபாசமாக பேசி கன்னத்தில் அறைந்த பிரபல நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை வீட்டில் பணியாற்றிய சுபாஷ் சந்திர போஸ் என்பவர், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், ஐ-போன், லேப்டாப், கேமரா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடியதாக கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் சந்திரபோஸ், ஸ்டுடியோவில் பணியாற்றி வந்தபோது, நடிகையுடன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சுபாஷை நடிகை ஆபாசமாக பேசி கன்னத்தில் அறைந்ததாகவும், தயாரிப்பாளர் ராஜேஷ், தனது நண்பர்கள் 6 பேருடன் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுபாஷ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர், நடிகை உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில், நடிகை, தயாரிப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்