குழந்தை உயிரை காப்பாற்ற செய்யக்கூடாத காரியத்தை செய்த தந்தை - போலீசை அதிரவைத்த அதிர்ச்சி வாக்குமூலம்

x

சென்னையில் போதைப்பொருள் விற்று கைதான நபர், தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக இந்த தொழிலில் இறங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்..

சென்னை அரும்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 55 ஊசி போடும் சிரஞ்சிகள், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக, இந்த தொழிலில் இறங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூரில் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வாங்கி வந்து, அரும்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி, இன்ஸ்டாகிராம் மூலம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜசேகரன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்