காக்கா தோப்பு பாலாஜியின் மற்றொரு முகம்.. கனத்த இதயத்துடன் சொன்ன தாயார்

x

சென்னை வியாசர்பாடி அருகே பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, போலீசார் என்கவுண்ட்டரில் உயிரிழந்தார். அவரது உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, ஆர்டிஓ இப்ராஹிம், மருத்துவமனைக்கு வருகை தந்து, உடலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

அவரது குடும்பத்தினரிடமும் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கண்மணி, காளஹஸ்திக்கு சென்ற தனது மகனை போலீசார் அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் செய்ததாக கூறினார். காக்கா தோப்பு பாலாஜியின் உடலை உறுப்பு தானம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார். காக்கா தோப்பு பாலாஜியை திட்டமிட்டே போலீசார் என்கவுன்ட்டர் செய்ததாக அவருடைய தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்