சென்னையில் MTC பேருந்து கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் பலியான பயங்கரம். - நேரில் பார்த்தவர் பகீர் பேட்டி

x

சென்னை, மதுரவாயல் அருகே, பைபாஸ் சாலையில் இருந்து தடைப்புகளை உடைத்துக் கொண்டு அரசு பேருந்து கவிழ்ந்ததில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, மதுரவாயல் அடுத்த வானகரம், அருகே விபத்துக்குள்ளாகி இருக்கிறது. பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்துள்ளது. இந்நிலையில், தடுப்புகளை உடைத்துக் கொண்டு இடது பக்க பள்ளத்தில் இறங்கி.. சர்வீஸ் சாலையில் பேருந்து கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், சர்வீஸ் சாலையில் வந்த ஆட்டோ மீது பேருந்து மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்